June 8, 2025
பெரியகுளத்தில் பாலசுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில் பங்குனி தேர் திருவிழா.

பெரியகுளத்தில் பாலசுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில் பங்குனி தேர் திருவிழா.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் சுவாமி தரிசனம்

பெரியகுளம்: ஏப்ரல் :11

தேனி மாவட்டம் பெரியகுளம் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட பெரியகுளம் ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனுறை, ஸ்ரீ ராஜேந்திர சோழீஸ்வரர் சுவாமி, ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி தேர் திருவிழா நடைபெற்றது.

பங்குனி உத்திர தேர் திருவிழா ஏப் 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் திருவிழா நடைபெற்றது. தினந்தோறும் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நிகழ்வு நடைபெறும். 9ம் நாள் திருவிழாவான ஏப்.10ம் தேதி முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

தேர் திருவிழாவானது நகரின் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் அதன் நிலை வந்து சேரும். திருவிழாவினை முன்னிட்டு ராஜேந்திர சோழீஸ்வரர் சிவனடியார் அறக்கட்டளை சார்பாக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.திமுக தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் , தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன் , பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார் ஆகியோர் தேரினை வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் , நகரச் செயலாளர் முகமது இலியாஸ், பாலசுப்பிரமணியர் கோவில் செயல் அலுவலர் சுந்தரி , வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் செயல் அலுவலர் நாராயணி , ஆய்வாளர்கள் தனலட்சுமி (பெரியகுளம்) ,கார்த்திகேயன் (தேனி), கிருபா தேவி (உசிலம்பட்டி), சவடபூபதி (பேரையூர்) மற்றும் கோவில் பணியாளர்கள், திமுக நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர் . தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் தேனி ஆவின் சேர்மன் ஓ.ராஜா மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த திருவிழாவில் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெரியகுளம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நல்லு தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.