
வாடிப்பட்டி அருகே நவநீத பெருமாள் கோவில் ராம நவமி விழா
வாடிப்பட்டி, ஏப்.7-
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே நீரேத்தான் பழமையும் பெருமையும் வாய்ந்த நவநீத பெருமாள் கோவிலில் ராம நவமி விழா நடந்தது.

இந்த விழாவையொட்டி முதல் நாள் காலை 10 மணி முதல் 12 மணி வரை சுவாமிக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு சுந்தர காண்டம் பாராயணம் படிக்கப்பட்டது. இரண்டாம் நாள் நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூப தரிசனம் கோபூஜை நடந்தது. 8 மணிக்கு சுவாமி கிரீடம் அனுமார் திருக்கோயில் இருந்து புறப்பட்டு வீதி உலா பஜனை நடந்தது. 9 மணி முதல் 12 மணி வரை பெருமாள் திருமொழி சேவா காலம் செய்யப்பட்டது.
இதில், கச்சைகட்டி எதிராஜர் கோஸ்டியினர் பஜனை பாடல் பாடினர். மாலை 6 மணிக்கு ஸ்ரீராமர் தொட்டில் வைபவம் நடந்தது. அதன் பின் பெரிய வாட் சான்பிள்ளை அருளிச்செய்த பாசுரப்படி ராமாயண பாராயணம் படிக்கப்பட்டது.
இதன் ஏற்பாடுகளை, நவநீத பெருமாள்கோயில் பரம்பரை டிரஸ்டி அர்ச்சகர் கண்ணன் தலைமையில் பக்தர்கள் பாகவ தோத்தமர்கள்மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். அதேபோல், வாடிப்பட்டி பொன்மலை சீனிவாச பெருமாள் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யபட்டு ராமர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.