
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் கோட்டத்துறை பஞ்சாயத்து பெரு ச்சி பாளையத்தில் தமிழக வெற்றிக் கழக கொடியேற்ற விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் கோட்டத்துறை பஞ்சாயத்து பெருச்சிபாளையம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கொடியேற்றம் நிகழ்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜன் தலைமை தாங்கினார் மற்றும் மாவட்ட நிர்வாகி விஜய் சிவா. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலன் முன்னிலை வகித்தார்

தொப்பம்பட்டி ஒன்றிய தலைமை மணிகண்டன் தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய தலைமை நிர்வாகிகளான வசந்த் குமார் , விக்னேஷ் யுவராஜ் என்ற கருப்புசாமி, பழனி குமார் , செல்வம் களப்பணியாற்றி விழாவினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
கழகப் பேச்சாளர் கௌதம் மாரிமுத்து எழுச்சி உரையாற்றினார். , மற்றும் கழகக் கொடியேற்றி தலைமை உரை திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜன் உரையாற்றினார்.
மேலும் இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு விலையில்லா புடவை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள்,பேனா ஆகியவை வழங்கப்பட்டது.தொப்பம்பட்டி ஒன்றியத்தின் 38 பஞ்சாயத்தை சேர்ந்த கிளை நிர்வாகிகள் அனைவருக்கும் கட்சி வேட்டி வழங்கப்பட்டது.






