June 8, 2025
திருமங்கலம் ஒன்றியத்தில் செயலாளர் ஆர் வி சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருமங்கலம் ஒன்றியத்தில் செயலாளர் ஆர் வி சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து
திருமங்கலம் ஒன்றிய பகுதியில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் அறிவுறுத்தலின்படி திருமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்வி சண்முகம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆலம்பட்டி, சௌடார்பட்டி ஊராட்சி மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது. மீனாட்சிபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஆர்வி சண்முகம் தலைமை வகித்து கண்ட உரையாற்றினார்.

திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர் ஏ சி சண்முகம், முன்னாள் கவுன்சிலர் ஜாகிர் உசேன், மாவட்ட பிரதிநிதி ஒச்சு, அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் ரகுபதி, திமுக பிரதிநிதிகள் செல்வகுமார், நெடுமாறன், செல்வராஜ், சக்திவேல் உள்ளிட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

100 நாள் வேலை திட்டம் ஏழை எளிய மக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களுக்காக இந்தத் திட்டம். கொண்டுவரப்பட்டது. கிராமத்தில் உன்னை ஏழை எளிய மக்கள் விவசாயம் இல்லாத நேரங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்த ப்பட வேண்டிய நோக்கத்தில் துவக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு இதனை மூடு விழா நடத்துவதற்காக பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே வேலை பார்த்த மக்களுக்கு சம்பளம் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது.

சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கு இணங்க பல்வேறு இடங்களில் நேற்று மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து சம்பளம் வழங்காத பட்சத்தில் முதல்வர் நேரடியாக களம் இறங்கி போராடுவார் என கூட்டத்தில் கண்டன கோசங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.