June 8, 2025
தேனியில் 3-ஆவது புத்தகத் திருவிழா அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்.

தேனியில் 3-ஆவது புத்தகத் திருவிழா அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்.

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட மேனகா மில் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 3-ஆவது புத்தகத் திருவிழாவினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்.ஐ.பெரியசாமி,மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் .மகாராஜன் முன்னிலையில் தொடங்கி வைத்தார். புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள புத்தக அரங்குகளை பார்வையிட்டார்.

தேனி மாவட்டத்தில் 3-ஆவது புத்தகத் திருவிழா (23.03.2025) முதல் 30.03.2025 வரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பேசியதாவது,
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி, சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மிகச்சிறப்பாக புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் மூன்றாம் ஆண்டாக புத்தகத் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனை மேம்படுத்திடும் வகையில் எண்ணற்ற கல்வி சார்ந்த திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.

அதனடிப்படையில் “இல்லம் தேடிக்கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், “நான் முதல்வன்” திட்டம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ஏராளமான மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
கல்விக்கு மட்டுமில்லாமல் மாநில, இந்திய மற்றும் உலக அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேனி மாவட்டத்தில் புதிய விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மாநில, தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் அரசு பணிகளில் இடஒதுக்கீடு பெற்று முன்னுரிமை பெறலாம்.
இந்தியாவிலே கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. வாழ்க்கைக்கு அடித்தளத்தை உருவாக்கும் புத்தகங்கள் இங்கு ஏராளமாக உள்ளது. மாணவர்களிடம் கல்வி என்ற ஆயுதத்தை கொடுத்துவிட்டால் அவர்களால் உலகைக்கூட ஆள முடியும். இப்புத்தத் திருவிழா சமுதாய வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட முயற்சியாகும்.

போட்டித்தேர்வுகளுக்குத் தேவையான அனைத்துவிதமான புத்தகங்களும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. இளைஞர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாங்கி படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பேசினார். இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ஐ.மகாலட்சுமி, திட்ட இயக்குநர்கள் அபிதா ஹனீப் (ஊரக வளர்ச்சி முகமை), சந்திரா (மகளிர் திட்டம்), உதவி காவல் கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமணிய பாலசந்ரா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லெட்சுமணன், பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் மிதுன்சக்கரவர்த்தி, நகர்மன்றத்தலைவர்கள் ரேணுபிரியா பாலமுருகன் (தேனி-அல்லிநகரம்), சுமிதா சிவக்குமார் (பெரியகுளம்), ராஜராஜேஸ்வரி சங்கர் (போடிநாயக்கனூர்), அய்யம்மாள் ராமு (சின்னமனூர்), பழனிசெட்டிபட்டி பேரூராட்சி துணைத்தலைவர் மணிமாறன், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.கலைச்செல்வி, துணை இயக்குநர் (தோட்டக்கலை) நிர்மலா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார், தாட்கோ மேலாளர் சரளா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா, உதவி இயக்குநர் (தமிழ்வளர்ச்சித்துறை) இளங்கோ, துணை ஆட்சியர் (பயிற்சி) டினு அரவிந்த், திமுக வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன்,அனைத்து பேரூராட்சித் தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், செயல் அலுவலர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.