June 9, 2025
குழந்தைகளுக்கு பெற்றோர்கள் செல்போன் கொடுக்கக் கூடாது தாசில்தார் ராமச்சந்திரன் அறிவுரை

குழந்தைகளுக்கு பெற்றோர்கள் செல்போன் கொடுக்கக் கூடாது தாசில்தார் ராமச்சந்திரன் அறிவுரை

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாதம்பட்டி மேட்டுப் பெருமாள் நகர் விஷ்வ பாரதி வித்யா மந்திர் ஆங்கில நர்சரி பிரைமரி பள்ளி 28-மாண்டு ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு, தாசில்தார் ராமசந்திரன் தலைமை தாங்கி பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-
பெற்றோர்கள் தான் குழந்தைகளின் வழிகாட்டியா வார்கள். அதனால் நல்ல கருத்தை குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும். குழந்தைகள் எப்பொழுதும் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை கேட்ட வார்த்தையை தான் பேசுவார்கள். குழந்தைகள் வளர்வதற்கு நல்ல சுற்றுச்சூழலை உருவாக்கினால் அதை கடைப்பிடித்து வளர்வார்கள். குழந்தைகளிடம் பெற்றோர்கள் செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். எனவே பெற்றோர்கள் எந்தவித கெட்ட பழக்கத்திற்கும் உட்படாமல் இருக்க வேண்டும். நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளே நீங்களும் பெற்றோர் சொல்படி கேட்டு நடக்க வேண்டும்.

பெற்றோர்களின் கனவுகளை நினைவாக்க வேண்டும். செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் அதில் செலவழிக்கும் நேரத்தை படிப்பிலும், விளையாட்டி லும் உடற்பயிற்சியிலும் செலவிட வேண்டும்.

படிப்பதனால் அறிவு வளர்ச்சி பெறும்,உடற்பயிற்சியால் உடல் ஆரோக்கியம் பெறும் செல்போன் பார்ப்பதால் கண்பார்வை குறைபாடு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும். குழந்தைகளுக்கு பெற்றோர்கள் செல்போன் கொடுக்கக் கூடாது. அதனால் குழந்தைகளின் உடலும் உள்ளமும் நலம் பெற வளர்ச்சியில் அக்கறை கொண்டு கண்ணும் கருத்துமாக பார்த்து வளர்க்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். முதல்வர் எஸ் எஸ் குபேந்திரன், துணை தாளாளர் எஸ்.கே.சுதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் போஸ் பாப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவன் ஹனுமித்ரன் வரவேற்றார்.

ஆசிரியர் அனிதா ஆங்கிலத்தில் ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் காயத்ரி தமிழில் ஆண்டறிக்கை வாசித்தார். இந்த விழாவில் திருவள்ளுவர், ஒளவையார், விண்வெளி வீரர், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு மாறுவேடமணிந்து மழலையர்களும், ஆடல், பாடல், நாடகம், தனித்திறன்களை வெளிபடுத்தி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பரிசு பெற்றனர். இதில் ஏராளமான பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
முடிவில் , ஆசிரியை ரமா நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.