
தர்மத்தை எவன் அழிக்கிறானோ அவனை தர்மம் அழிக்கிறது. தர்மத்தை எவன் காக்கிறானோ அவனை தர்மம் காப்பாற்றுகிறது.
செய்த குற்றத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் இல்லாமல் போகும் அப்போது தெரியும் யாரும் யாருக்காகவும் உண்மையாக இருக்க வேண்டியதோ நிரூபிக்க வேண்டியதோ அவசியமில்லை.
தன் மனதுக்கும் இறைவனுக்கும், உண்மையாக இருந்தாலே போதும்.
ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவார்கள். அந்த ஆயிரத்துக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தால் ஆயுளும் போதாது நமக்கு.
உடலே கோவில் அதனை வலுவாக வைத்து கொள், மனமே பூசாரி அவனை அறிவோடு வைத்து கொள், உயிரின் உணர்வே கடவுள் அவனை மகிழ்வாக வைத்து கொள், இது தான் மொத்த வாழ்வும், மேலே சொன்னதை ஞானமாய் திரும்ப ஒருமுறை தெளிந்த மனதோடு படித்து புரிந்து கொள், ஏனெனில் இதுவே உனக்கு வாழ வழிகாட்டும் எனது அருள் வாக்கு.
தேடுவதே தன்னை தான் என்று அறியும் வரை, நீ தேடி தான் ஆகவேண்டும் வேறுவழியில்லை.