June 8, 2025
பெரியகுளத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.

பெரியகுளத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட அழகர்சாமிபுரத்தில். உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழகம், நம்மால் முடியும் நல சேவை சங்கம், வழக்கறிஞர்கள் சங்கம், சார்பில் பல்வேறு துறைகளில் சேவை புரிந்து சாதனை புரிந்த மகளிர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இரண்டு பெண் ஆட்டோ ஓட்டுனர்கள்,மற்றும் இலவசமாக மாணவ மாணவிகளுக்கு கல்வி பயிற்சி அளிக்கும் ஆசிரியர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. நம்மால் முடியும் நல சேவை சங்கம் கிளை செயலாளர் அ.மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பகுத்தறிவாளர் கழகம் கிளை தலைவர் இப்ராஹிம் பாட்ஷா, கௌரவ தலைவர் த.மு.ச. ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினார். பகுத்தறிவாளர் கழகம் மாவட்டசெயலாளர் அ.மோகன் முன்னிலை வகித்தார். முத்துவேல் பாண்டியராஜன், எ.கண்ணன்.நகர அமைப்பாளர் கருப்பண்ணன், மாவட்டபொருளாளர் கலந்து கொண்டார். ஆறுமுகம், பகுத்தறிவாளர் கழகநகர தலைவர் கள்ளிப்பட்டி கபிலன், தலைவர் துரைப்பாண்டி, துணை செயலாளர் சையது சுல்தான், துணைத்தலைவர். செந்தில்குமார், ஆசிரியர் ரேவதி , ஜெயந்தி,கணகு, சுதாகர் செயலாளர் வழக்கறிஞர் சங்கம், மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், ஊர் பொதுமக்கள் ,மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பகுத்தறிவு உரைகளை கேட்டு மகிழ்ந்தனர். பகுத்தறிவாளர் கழக பொருளாளர் வழக்கறிஞர் காமராஜ் நன்றியுரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.