
சனி மஹா பிரதோசம்: கோயில்களில் பக்தர்கள் தரிசனம்
மதுரை மாவட்ட சிவ ஆலயங்களில், சிவப்பிரதோஷம் நடைபெற்றது. மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில் பிரதோஷ த்தை ஒட்டி, சுவாமி, அம்பாள், நந்திகேஷ்வரன், சனீஸ்வர லிங்கத் துக்கு, பக்தர்கள் சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் செய்தனர்.
இதில், தொழிலதிபர் எம். வி. எம். மணி, பள்ளித் தாளாளர் டாக்டர் எம். மருது பாண்டியன், கவுன்சிலர் வள்ளி மயில், கோயில் செயல் அலுவலர் ச.இளமதி, கணக்கர் சி. பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பக்தர்களுக்கு, கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதே போல மதுரை தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயம், மதுரை சாத்தமங்கலம் பால விநாயகர் ஆலயம், வரசித்தி விநாயகர், யாணைக் குழாய் முத்து மாரியம்மன் ஆலயம், மதுரை வைகை காலனி வைகை விநாயகர் ஆலயம், வைகை காலனி, வைகை கிழக்கு, சக்தி மாரியம்மன் ஆலயங்களில், பிரதோஷ த்தை ஒட்டி, சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சணைகள் நடைபெற்றது.