June 9, 2025
திரவியம் கல்லூரியில் நேரு யுவகேந்திரா சார்பில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

திரவியம் கல்லூரியில் நேரு யுவகேந்திரா சார்பில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டியில் உள்ள திரவியம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நேரு யுவகேந்திரா சார்பாக மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, பேச்சு போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் லட்சுமி தலைமை வகித்தார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அரசு சான்றிதழ் மற்றும் பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட பொறுப்பாளர் முத்துலட்சுமி, பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் கோகுல் கிருஷ்ணன் மற்றும் குழு தன்னார்வலர்கள் செய்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.