
பழனியில் சத்யா நகர் பகுதியில், பழனி நகராட்சி மூலம் குடிநீர் விநியோகத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரின் நிலை மிக மோசமாகவும் கலங்கிய நிலையிலும் காணப்படுகிறது. தண்ணீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அருந்துவதால், நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் குடிநீர் வழங்கால் வாரிய அதிகாரிகள், பழனி நகராட்சி நிர்வாகம், பழனி வட்டாட்சியர், போன்ற அதிகாரிகள் நீர் நிலைகளை ஆய்வு மேற்கொண்டு, சுகாதாரமான குடிநீரை பொதுமக்கள் அருந்துவதற்கு, வழிவகை செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை.
பழனி நிருபர்.நா.ராஜாமணி