
காரியாபட்டி,யில் மகா சிவராத்திரி பிரதோஷத்தை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை
காரியாபட்டி பாண்டியன் நகர், முக்குரோடு, ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் மாசி சிவராத்திரி பிரதோஷத்தை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக, அருள்மிகு மாரியம்மன் மற்றும் அனைத்து தெய்வங் களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதன் பிறகு திருவிளக்கு பூஜைகள் நடை பெற்றது.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.