June 8, 2025
தமிழகத்தில் கல்வி பயில மொழியை கூறி நிதியை வழங்க மாட்டோம் என மத்திய அரசு மிரட்டல். அஞ்சாத தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.

தமிழகத்தில் கல்வி பயில மொழியை கூறி நிதியை வழங்க மாட்டோம் என மத்திய அரசு மிரட்டல். அஞ்சாத தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்தியா மதசார்பற்ற ஒரு ஒப்பற்ற பன்முகத்தன்மையை கொண்ட நாடு. இந்தியாவைப் பொறுத்தவரை கூட்டாட்சி தத்துவத்தை பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.

மத்தியில் ஒரு அரசும் மாநிலத்தில் ஒரு அரசும் இருப்பது இங்கு சாதாரண விஷயம். காரணம் மக்கள் கூட்டாட்சி தத்துவ முறைப்படி மக்களாட்சி நடைபெற்று வருவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு அடிபடையாமல் பல போராட்டங்களை வலியுறுத்தி வெற்றி கண்டது என்பது வரலாறு.

அந்த வகையில் கட்டாய இந்தி மொழி திணிப்பு என்ற சூழ்நிலை வரும்போது அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, போன்ற தலைவர்கள் போராடி கட்டாய இந்தி முறை தமிழகத்தில் திணிக்க கூடாது என்று அன்றைய காங்கிரஸ் மத்திய ஆளுங்கட்சியை பின்வாங்க வைத்து இதுவரை நடைமுறையில் உள்ளது.

அந்த நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் ஒரு பேட்டியில் தமிழகத்திற்கு கல்வி நிதியை மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்கப்படும் இல்லை என வழங்கப்பட மாட்டாது என்று ஆக்கப்பூர்வமாக கூறியதாக ஒரு செய்தி வெளியானது.

இந்த செய்தியை அறிந்தவுடன் தமிழகம் முதல்வர் மு,க. ஸ்டாலின், மதிமுக கட்சி நிறுவனர் வைகோ, மற்றும் பலதரப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மொழியை காரணம் காட்டி தமிழகத்தை மிரட்டினால் தமிழகம் ஒருபோதும் அஞ்சாது என்று ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும் என்று கூறி திமுக கூட்டணியில் இடம் பெற்ற அனைத்து கட்சிகளும் சென்னையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி கண்டனம் தெரிவித்தனர்.

அதுமட்டுமல்ல தமிழகத்தில் உள்ள ஏராளமான பேர்கள் இந்தி மொழியை கட்டாயப்படுத்தி கற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பேசியது ஏற்க முடியாது என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது.

இதனை அறிந்த மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

நமது நாட்டின் கல்வி முறையில் எதிர்காலம் மிகுந்த மரியாதையுடனும், ஆழ்ந்த பொறுப்புடனும் தான் நான் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். நமது இளைய தலைமுறையின் தலைவிதியை வடிவமைக்கும் பொறுப்பில் உள்ள தலைவர்கள் வகையில் மாநில அரசுக்கு அப்பாற்பட்டு உயர்ந்த நமது மாணவர்களுக்கு அறிவு திறன்கள் மற்றும் எதிர்காலத்திற்கான வாய்ப்புகளுடன் அதிகாரம் அளிக்கும் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம்.

2020 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை என்பது பல்வேறு வகையில் தமிழகம் இந்தியாவிற்கு முன்னோடியாக திகழ்கின்ற மாநிலம் கல்வியிலும் உலக அளவில் பேசப்பட வேண்டும் என்பது மட்டுமே மத்திய அரசின் நோக்கம். எந்த வகையிலும் தமிழ் மொழியை பாதிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படாது.

தமிழ் மொழியை திருவள்ளுவர் போன்ற மிகப்பெரிய புலமையை உலகம் முழுக்க கொண்டு செல்ல வேண்டும் என்றும் பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். ஆகவே தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தும், கல்வியை மையப்படுத்தி அரசியல் செய்ய வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்து கடிதத்தில் கூறியிருந்தார்.

இதை அறிந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின், மற்றும் துணை முதலமைச்சர் உதயாநிதி மற்றும் பல அரசியல் தலைவர்கள் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழகத்திற்கு உரிமையாக கொடுக்க வேண்டிய நிதியை வழங்காமல் காலதாமதம் செய்து வருவது ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே உடனடியாக மாநிலக் கல்வி நிதியை உடனடியாக கொடுக்க வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மத்திய அரசு மாநில அரசும் கல்வியை மையப்படுத்தி ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது அரசியலுக்கு அழகு அல்ல என்று சமூக ஆர்வலர்கள் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர்.

எது எப்படி இருப்பினும் ஒவ்வொரு ஆண்டு மத்திய அரசு ஒதுக்கக்கூடிய மாநில அரசுக்கு ஒதுக்கக்கூடிய கல்வி நிதியை மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் உடனடியாக வழங்குவதற்கு தக்க ஏற்பாடு மத்திய அரசு செய்து தர வேண்டும்.

அதனைத் தொடர்ந்து மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஒரே கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசும் மாநில அரசுகளும் மக்களின் நலன் கருதி மக்கள் மத்தியில் இந்தி மொழியை விருப்ப பாடமாக வைக்கலாமா? இல்லை மும்மொழிக் கொள்கை திட்டத்தில் வைக்கலாமா? என்று மக்கள் கருத்து கணிப்பு நடத்தி முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு மக்கள் கருத்து கணிப்பு வேணும் எடுக்கும்போது மாநிலத்திற்கும், மத்திய அரசுக்கும் ஏற்படக்கூடிய மனக்கசப்பு இல்லாமல் ஒரு முடிவுக்கு வர வாய்ப்பு இருக்கிறது என்ற கருத்தை பரவலாக பேசப்படுகிறது. எனவே மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு கால தாமதம் செய்யாமல் உடனே வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.