June 9, 2025
திருவேடகம், விவேகானந்த கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

திருவேடகம், விவேகானந்த கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

மதுரை மாவட்டம் திருவேடகம் அருகே உள்ள தச்சம்பத்து கிராமத்தில் திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் ஏழு நாள் சிறப்பு முகாம் 13.02.2025 முதல் 19.02.2025 வரை நடைபெற்று வருகிறது.

முகாமின் முக்கிய நிகழ்வாக 17.02.2025 அன்று கிராமத்தின் தெருக்களில் பொதுமக்களுக்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு மற்றும் சைபர் கிரைம் குறித்த விழப்புணர்வு தரும்வகையில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை கல்லூரியின் முதல்வர் முனைவர் டி. வெங்கடேசன் தலைமையில் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் அசோக்குமார், முனைவர் ரமேஷ்குமார், திரு. ரகு, முனைவர் ராஜ்குமார், மற்றும் முனைவர் தினகரன் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் முனைவர் செல்வராஜ், முனைவர் எல்லைராஜா, முனைவர் அருள்மாறன், முனைவர் மோகன், முனைவர் மாரிமுத்து மேற் கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.