
பழனி ராயல் சிட்டி அரிமா சங்கத்தின் சார்பில் நடந்த தைப்பூச அன்னதானத்தில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னதானம் பெற்று மகிழ்வடைந்தார்கள்.
அன்னதானத்தை புதிய அரிமா மாவட்டத்தின் பட்டய ஆளுநர் லைன் கே சுப்புராஜ் அவர்கள் துவக்கி வைத்தார் தலைவர் லைன் எஸ் மனோகரன் செயலர் லைன் ஜெபக்கனிராஜ் பொருளர் லைன் செந்தில்நாதன் ஜோதி கணேசன் ராயல் சிட்டி அரிமா சங்கத்தின் நிர்வாகி லைன் உதயகுமார் மற்றும் லைன் வெங்கடேசன் லயன் ராஜபாண்டியன் லைன் எஸ் செந்தில்குமார் ஆகியோர் முன்னிருந்து அன்னதான ஏற்பாடுகளை செய்து அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கினார்கள்.
இந்த சிறப்பான நிகழ்வில் லைன் ஏ சுந்தரம் லயன் ராஜபாண்டியன் லைன் சூப்பர் முத்துக்குமார் லைன் ரவி லைன் செந்தில்குமார் லைன் டைமண்ட் நிர்வாகி ராஜேந்திரன் லைன் பெரியராஜ் லைன் வெங்கடேஸ்வரன் மாவட்ட இணைப்பொருளர் வி.மனோகரன் ஆகியோர் மற்ற சங்ககளில் இருந்து வந்து சிறப்பு அன்னதானத்தில் கலந்து கொண்டு அன்னதானம் செய்த ராயல் சிட்டி சங்கத்தை பெருமைப்படுத்தி வாழ்த்தினார்கள்.
தொடர்ந்து தைப்பூச அன்னதானத்தை அரிமா சங்கங்கள் தொடர்ந்து நிகழ்த்தி இருந்தாலும் நிறைவாக பழனி ராயல் சிட்டி அரிமா சங்கம் செய்த அன்னதானம் என்பது இன்றைய தினத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் மக்களுக்கு பயனுள்ளதாகவும் அமைந்தது.
பழனி லைன் சூப்பர் முத்துக்குமார் MjF தலைவர் வைர விழா காணும் பழனி அரிமா சங்கம் சார்பாக ராயல் சிட்டி அரிமா சங்க உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.