June 8, 2025
சோழவந்தான் பகுதி கறிக்கோழி கடைகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு

சோழவந்தான் பகுதி கறிக்கோழி கடைகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு

சோழவந்தான் பிப்ர 8

மதுரை மாவட்டம் சோழவந்தான் தனியார் உணவகத்தில் கிரில் சிக்கன் சாப்பிட்டு 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் காவல்துறையினர் தனியார் உணவகத்தில் ஆய்வு செய்து கடைக்கு சீல் வைத்தனர் மேலும் கடையில் இருந்த உணவு மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்ந்து கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் இந்த நிலையில் சோழவந்தான் பகுதி கடைகளில் மாலை நேரங்களில் கிரில் சிக்கன் மற்றும் அசைவ உணவுகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சப்ளை செய்யும் கறிக்கோழி மொத்த கடைகள் பத்துக்கும் மேற்பட்ட நிலையில் உள்ளதால் அந்த கடைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியில் உள்ள தனியார் கறிக்கோழி மொத்த கடையில் ஆய்வினை மேற்கொண்டனர் அதில் கடையில் உள்ள இறுப்பு கோழிகள் விவரம் மற்றும் குளிர்சாதன பெட்டிகளில் இறுப்பு வைக்கப்பட்டுள்ளதா மற்றும் கறிக்கோழிகளில் இரசாயன பொருட்கள் எதுவும் கலந்து விற்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர் சவரிராஜ் முத்துராஜ், மணிகண்டன், பூபன்சக்கரவர்த்தி, சதீஷ், புவனேஸ்வரன் மற்றும் பணியாளர்கள் ஆய்வு செய்தனர் தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில் சோழவந்தானில் தனியார் உணவகத்தில் எதிர்பாராத சம்பவம் நடந்த நிலையில் அனைத்து அசைவ உணவு கடைகளிலும் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் கெட்டுப் போன உணவுகள் மற்றும் இறந்து கறிக்கோழிகள் விற்பனை செய்வது தெரிந்தால் கடையின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்.

ஆகையால் பொதுமக்களுக்கு வழங்கும் உணவை சுகாதார முறையில் வழங்க வேண்டும் என ஒவ்வொரு கடை உரிமையாளருக்கும் அறிவுறுத்தி இருக்கிறோம் அதனை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ந்து கண்காணிப்போம் என்று கூறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.