
கல்வித் தந்தை சுவாமி சகஜானந்தா வரலாற்றை அறிவோம்.
1890 ஜனவரி 27 ௭ ந் தேதி ஆரணி வட்டம் மேல் புதுப்பாக்கம் என்ற ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.
17-வயதில் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு அறநெறி வாழ்க்கையை பின்பற்றியவர்.
சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு உள்ளே பட்டியல் மக்கள் நுழையக் கூடாது, செருப்பணிய கூடாது , குடை பிடிக்க கூடாது, குதிபுரல வேட்டி கட்ட கூடாது என்ற என்ற பல்வேறுபட்ட அடக்கு முறையை கண்டு கொதித்தெழுந்து போராடியவர்.
அன்றைய தினமே மக்களுக்கு தொண்டு செய்ய காவி மாற்றி கதர் உடை அணிந்தவர். எனவேதான் பட்டியலின மக்களுக்கு கல்வி வழங்க வேண்டும், அதுவே அவர்களுக்கு தலைநிமிர்வை வழங்கும் என்பதால் ஸ.
1911நந்தனார் பள்ளியை சிதம்பரத்தில் தொடக்கியவர்.
1916ல் நந்தனார் கல்விக் கழகமாக மாற்றியவர்.
1926-1932 வரை ஆதிதிராவிட மகாஜன சபை மூலம் சட்ட மேலவை உறுப்பினராக பணியாற்றியவர்.
அப்போதுதான் பள்ளிக்கூடங்களை சேகரிகளிலே கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் , மகான வருமானத்தில் 5ல் 1 பங்கு பட்டியலின மக்களுக்கு நலன் சார்ந்து செலவிட வேண்டும் என்றும், மகான நீதிமன்தத்தில், நீதிபதி நியமணத்தில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற அவர் விடுத்த கோரிக்கை மகத்தானது.
அரசியலும் ஈடுபட்டு 1932 ௭ சிதம்பரம் தனித் தொகுதியில் நின்று சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர்.
1936-1959 ௭ தொடர்ந்து 34 ஆண்டு சட்டமன்றத்தில் பட்டியலின மக்களின் உரிமைக்காக போராடியவர்.
அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார், சுவாமி சகஜாநந்தா வேட்பாளாராய் இருக்கும் வரை தி.மு.க. எதிர்த்து வேட்பாளரை நிறுத்தாது என கூறினார். அப்படியான நற்பெயரை பெற்றவர்..
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ்வழிக்கல்விக்காக போராடியவர்..
பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்துக்களை ஏற்று இரட்டை வாக்கு உரிமையை ஆதரித்தும், இரண்டாம் வட்டமேசை மாநாட்டிற்க்கு புரட்சியாளர் செல்லும் போது நேரில் சென்று வாழ்த்து கூறிய மாமனிதர் இவர். அது மட்டுமல்லாமல் புரட்சியாளரின் கொள்கைகளை நடைமுறைபடுத்த வாழ்நாள் முழுக்க முயன்ற மகத்தான தலைவர் .
அவரின் பிறந்த நாளில் அவரை போற்றுவோம்ஸ.
ஐயாவுக்கு புகழ் வணக்கங்கள்
தெ.அம்பேத்கர் பிரசாந்த் வழக்கறிஞர் மாநில இளைஞரணி தலைவர்