
கந்தர்வகோட்டை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் கொண்டாட்டம்
கந்தர்வகோட்டை ஜன 23.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெத்து வாசல் பட்டி கிளையின் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளைச் செயலாளர் சத்யா அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளர் ரகமத்துல்லா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து பேசும் போது
இந்திய விடுதலைப் போரின் முக்கியமான ஆளுமையும், ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போர் புரிந்த ராணுவப் படையை வழிநடத்தியவருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், 1897 ஜனவரி 23-ல் ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டக்கில் பிறந்தார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஒரு அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வமுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார், அவர் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இருந்து சுதந்திரத்தை கைப்பற்ற ஆசாத் ஹிந்த் ஃபவுஜ் அல்லது இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கினார்.
இந்தியா திரும்பிய பிறகு, ஆங்கிலேயருக்கு எதிராக மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். காந்திஜி அவரை சித்தரஞ்சன் தாஸுடன் இணைந்து பணியாற்றச் சொன்னார். பின்னர் சுபாஸ் போஸின் அரசியல் குருவானார்.
சுதந்திர இயக்கத்தில் பணியாற்றிய போது, பலமுறை சிறை சென்றார். 1927-ல் சிறையிலிருந்து விடுதலையானபோது ஸ்வராஜ் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
பின்னர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு ஜவஹர்லால் நேருவுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.
1938 இல், அவர் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். அவர் தலைமையில் ஒரு திட்டக்குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு தொழில்மயமாக்கல் கொள்கையை தயாரித்தது. இந்திய தேசிய ராணுவம் என்றும் குறிப்பிடப்படும் ஆசாத் ஹிந்த் ஃபௌஜ் என்ற அமைப்பை உருவாக்கினார்.
ஆங்கிலேயர்களை தோற்கடித்து தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பாலான நாடுகளை ஜப்பான் ஆக்கிரமித்த பிறகு, இந்திய தேசிய ராணுவம் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட போர் கைதிகளிடமிருந்து ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியாவை விடுவிப்பதே ராணுவத்தை உருவாக்கியதன் நோக்கமாக இருந்தது என்று பேசினார். மாணவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொண்டனர்.