
காரத்தொழுவில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அஇஅதிமுக கட்சியின் சார்பில் எம்.ஜி.ஆர் 108 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை சேம்பர் கண்ணன் ( எ ) ஆர்.கோபாலகிருஷ்ணன் நெசவாளர் சார்பு அணி கிழக்கு மாவட்ட செயலாளர் , எஸ்.சரவணகுமார் மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஆகியோர் உணவுகளை வழங்கி துவக்கி வைத்தனர்.
அக்கட்சியின் கிளைக்கழக செயலாளர்களான J.செந்தில் ( எ ) பொன்னுச்சாமி , A.ராசலிங்கம், A.கோவிந்தராஜ் , K.கிருஷ்ணன், K.K.நடராஜ் ஆகியோருடன் N.சண்முகசுந்தரம் , K.P.வடிவேல் , ஞானசண்முகம், கைலாசபூபதி , பவுல்ராஜ், செக்கலிங்கம், M.சக்திவேல் , முன்னாள் கிளைக்கழக செயலாளர் K.முருகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.