
சாலை பாதுகாப்பு வார தலைக்கவச விழிப்புணர்வு பேரணி
அறந்தாங்கி,ஜன.12-புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல்துறையோடு இணைந்து தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் சாலை பாதுகாப்பு வார தலைக்கவச விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள்.
தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் அப்துல் பாரி தலைமையில் அறந்தாங்கி சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் மற்றும் ரோட்டரி துணை ஆளுநர் மருத்துவர் விஜய் ஆகியோர் முன்னிலையில் சாலை பாதுகாப்பு வார பிரச்சாரம் நடைபெற்றது.
அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார் கொடி அசைத்து வைக்க இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்திருந்த ரோட்டரி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அறந்தாங்கி செக் போஸ்ட் முதல் அரசு மருத்துவமனை வரை பேரணி சென்றார்கள்.
அறந்தாங்கி ரத்த வங்கி பொறுப்பாளரும் அரசு மருத்துவமனை மருத்துவர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இறுதியில் செயலாளர் ஆண்டோ பிரவீன் நன்றி கூறினார்.