
பழனி அருகே ஆயக்குடியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பேரூராட்சி சார்பாக தமிழக அரசின் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.

இந்நிகழ்வில் ஆயக்குடி திமுக பேரூர் செயலாளர் சின்னத்துரை தலைவர் மேனகா ஆனந்தன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றன.
தொடர்ந்து இந்நிகழ்வில் கூட்டுறவு சார் பதிவாளர்
இரமேஷ்குமார் ஆயக்குடி கூட்டுறவு செயலர் பாலன் பழைய ஆயக்குடி கூட்டுறவு செயலர் கருப்புசாமி மற்றும் அறிவு ஆகியோர் முன்னிலையில் விழா நிகழ்ச்சி நடைபெற்றன..
தொடர்ந்து ஆயக்குடி பகுதியில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டன.
இதில் அரிசி, சர்க்கரை, கரும்பு, உள்ளிட்ட தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி சிறப்பித்தனர்.
தொடர்ந்து இந்நிகழ்வில் ஆயக்குடி நியாய விலை கடை அதிகாரிகள் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றன.
பழனி நிருபர் : நா.ராஜாமணி