
புதுச்சேரி உப்பளம் தொகுதி வாணரப்பேட்டை மாரியம்மன் கோயில் பகுதி பொதுமக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்களிடம் பட்டா வழங்க வேண்டி கோரிக்கை வைத்தனர்
அப்பகுதியில் சுமார் 30க்கு மேற்பட்ட வீடுகள் பட்டா வழங்காமல் விடுபட்ட நிலையில் இருந்தது இது குறித்து சர்வே இயக்குனர் செந்தில் குமார் அவர்களை திமுக சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் நேரில் சென்று சந்தித்து மனு அளித்தார்,
பின்னர் அதன் நிலையை தெரிந்து கொள்ள இன்று மீண்டும் சட்ட மன்ற உறுப்பினர் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து சென்று நிலவை இயக்குனரை சந்தித்து பேசினார். 10 நாட்களுக்குள் பட்டா வழங்குதல் பணியை முடித்து கொடுக்கிறேன் என்று அதிகாரி சட்ட மன்ற உறுப்பினரிடம் உறுதி அளித்தார். உடன் ஆய்வாளர் சிவபாலன், கிளை செயலாளர் ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.