June 8, 2025
முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு முலம் 46 மாணவர்கள் தேர்வு.

முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு முலம் 46 மாணவர்கள் தேர்வு.

ஜன : 5

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த சென்னையில் உள்ள பிரபல பன்னாட்டு நிறுவனமான டெல்பி டிவிஎஸ் டெக்னாலாஜிஸ் சென்னை மற்றும் கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் டிப்ளமா 2025 ல் இறுதியாண்டு பயிலும் இயந்திரவில்துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல்துறை மற்றும் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை மாணவர்களுக்கு வேலை அளிக்கும் விதத்தில் வளாக நேர்முகத்தேர்வு நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் துவக்க விழாவி்ல் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் சேக்தாவுது தலைமையுரையாற்றினார்.கடந்த 10 வருடமாக 100 சதவிகிதம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தாகவும், இதுவரை 15,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல பன்னாட்டு நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.கல்லூரியில் இயந்திரவியல் துறைத்தலைவர் மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரி துணைமுதல்வர் முனைவர்.கணேஷ் குமார் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கி அனைவரையும் வரவேற்று பேசினார்.

டெல்பி டிவிஎஸ் டெக்னாலாஜிஸ்.நிறுவனத்தின் ரெங்கராஜன் அசோசியட் ரெக்கியுர்மேன்ட் மற்றும் சீதாராமன் பி எ அசோசிகேட்ஸ் சென்னை ஆகியோர் வளாக நேர்முகத் தேர்வினை நடத்தினார்கள். இந்த நேர்முக தேர்வில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து 57 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் டிப்ளமா 2025 ல் முடிக்க இருக்கும் இயந்திரவில்துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல்துறை மற்றும் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை மாணவர்கள் மொத்தம் 46 பேர் தேர்வு செய்யப்பட்டனர் இந்நிகழ்ச்சியின் இறுதியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் பாலசுப்ரமணியன் நன்றியுரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.