
உறைப்பணி: இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியான உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனி காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை மற்றும் நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதன்படி, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவார பகுதியான உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தொட்டப்பநாயக்கணூர், செட்டியபட்டி, முத்துப்பாண்டிபட்டி, வி.பெருமாள்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, கணவாய்பட்டி, மானுத்து, எழுமலை, உத்தப்புரம் மற்றும் எம்.கல்லுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் உறைபனி ஏற்பட்டது.
காலை 7 மணிக்கும் மேலாகவும் இந்த உறைபனி ஏற்பட்ட சூழலில் அதிகாலையில் விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சூரியன் உதித்த பின்பே கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை உருவானது.