
தாராபுரத்தில்தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலகம் திறப்புவிழா நடைபெற்றது.
மேற்கு மண்டல பொறுப்பாளர் கனல்.உ.கண்ணன் திறந்து வைத்தார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகம் தாராபுரத்தில் புதிதாக திறக்கப்பட்டது. திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மு.சரவணன் தலைமையில் , தென்மண்டலப் பொறுப்பாளர் சோ.குமரவேல் முன்னிலையில் , மேற்குமண்டலப் பொறுப்பாளர் கனல்.உ.கண்ணன் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர் ஜாபர் சாதிக், தலைமை நிலைய பேச்சாளர் மாரிமுத்து , மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கா.சாதிக்பாட்ஷா , உடுமலை தொகுதி பொறுப்பாளர் குடிமங்கலம் ஆறுமுகம், சீனிவாசன், பாலசுப்ரமணி, இராஜேந்திரன், தமிழரசன், இரமேஷ், கோபி, பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
