
புதிய ஆட்டோ ஸ்டாண்ட்: மஜக தலைவர் தமிமுன் அன்சாரி திறந்து வைத்தார்
அறந்தாங்கி,டிச.26-
தொழிற்சங்க மாவட்ட தலைவர் சோலைமலை தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் மாவட்ட துணை செயலாளர்கள் முஹம்மது யாசின் அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆட்டோ ஸ்டாண்ட் தலைவர் பாரதி அனைவரையும் வரவேற்றார் இறுதியில் செயலாளர் காளீஸ்வரன் நன்றி கூறினார்.
மாநிலத் துணைச் செயலாளர் அப்துல் சலாம், மாநில விவசாய அணி துணை செயலாளர் சேக் இஸ்மாயில், ஐகேபி மாநில செயலாளர் முனைவர் முபாரக் அலி, மாவட்ட செயலாளர் முகமது இப்ராஹிம், அலுவலக செயலாளர் முகமது ரியாஸ், ஸ்டாண்ட் நிர்வாகிகள் முத்துக்கிருஷ்ணன், சுந்தரமூர்த்தி, ஆனந்த், முருகன், சரவணகுமார், ஆனந்தன், பாலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக அரசர்குளத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் மணமக்களை வாழ்த்தி மஜக தலைவர் தமிமுன் அன்சாரி உரையாற்றினார். ஜமாத் நிர்வாகிகள் முகமது இப்ராஹிம், முகமது அலி, ஷேக் இஸ்மாயில் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.