June 8, 2025
அலங்காநல்லூர் அருகே நடந்த கிரிக்கெட் போட்டியில்திண்டுக்கல் நத்தம் அணி முதலிடம் பிடித்தது!2–வது இடத்தை மதுரை அணி வி.புதூர் கைப்பற்றியது!

அலங்காநல்லூர் அருகே நடந்த கிரிக்கெட் போட்டியில்திண்டுக்கல் நத்தம் அணி முதலிடம் பிடித்தது!2–வது இடத்தை மதுரை அணி வி.புதூர் கைப்பற்றியது!

அலங்காநல்லூர், டிச. 24–
மதுரை மாவட்­டம் அலங்­கா­நல்­லூர் பேரூ­ராட்­சிக்­குட்­பட்ட குற­வன்­கு­ளத்­தில் 21.12.2024, 22.12.2024 ஆகிய தேதி­க­ளில் பிரேம் நண்­பர்­கள் மற்­றும் நட்­சத்­திர நண்­பர்­கள் அறக்­கட்­டளை இணைந்து முத­லாம் ஆண்டு கிரிக்­கெட் போட்டி நடத்­தி­யது. இந்த போட்­டியை வி.ஆனந்த் (தி.மு.க. கிழக்கு மாவட்ட இளை­ஞ­ரணி துணை அமைப்­பா­ளர் சின்­ன­ஊர்­சேரி) தொடங்கி வைத்­தார்.

முதல் பரிசை திண்­டுக்­கல் மாவட்­டம் நத்­தம் அரசி அணி­யி­ன­ருக்கு ரூ.15,000 ரொக்க தொகையை நட்­சத்­திர நண்­பர்­கள் அறக்­கட்­டளை நிறு­வ­னர் டி.குரு­சாமி சார்­பாக நவீன் பரிசு மற்­றும் கோப்பை வழங்­கி­னார். 2–ம் பரிசை மதுரை வி.புதூர் பிடாரி அம்­மன் கிரிக்­கெட் கிளப்­பிற்கு ரூ.10,000 ரொக்க பரிசை குற­வன்­கு­ளம் எஸ்.பால்ச்­சா­மி–­லெட்­சுமி, வே.லெனின்­பி­ரபு (தமிழ்­நாடு காவல் துறை), வே.ஸ்டாலின்­பி­ரபு(இந்­திய ராணு­வம்) ஆகி­யோர் வழங்­கி­னர். 3–ம் பரிசை மதுரை பிரண்ட்ஸ் கிளப் அணி­யி­ன­ருக்கு ரூ.8,000 ரொக்க தொகையை ஏ.அப்­பாஸ் மந்­திரி அய்­யூர் எம்.ஏ.பிரிக்ஸ், பால­மேடு வழங்­கி­னார். 4–ம் பரிசை குற­வன்­கு­ளம் பிரேம் நண்­பர்­கள் அணி­யி­ன­ருக்கு ரூ.6,000–த்தை பி.எம்.எஸ்.சர­வ­ணன் (புதிய தமி­ழ­கம் கட்சி மாவட்ட இளை­ஞ­ரணி செய­லா­ளர், அய்­யூர்) வழங்­கி­னார். 5–ம் பரிசை மதுரை மாவட்­டம் வெளிச்­ச­நத்­தம் அணி­யி­ன­ருக்கு ரூ.4,000–த்தை அலங்­கா­நல்­லூர் பொன்.குமார் வழங்­கி­னார்.

அனைத்து போட்­டி­க­ளுக்­கும் கப் மற்­றும் மெடல்­களை நட்­சத்­திர நண்­பர்­கள் அறக்­கட்­டளை நிறு­வ­னர் டி.குரு­சாமி வழங்­கி­னார். சிறப்பு நன்­கொ­டை­யா­ளர்­கள் ஏ.முக­மது அலி ஜின்னா (ஆசி­ரி­யர்–­சட்­ட­க­ளம் நாளி­தழ் நிறு­வ­னர் – தங்­கம்­மாள் ரஹீம் அறக்­கட்­டளை, வாசன் (அலங்­கா­நல்­லூர் தி.மு.க. 3–வது வார்டு கவுன்­சி­லர், குற­வன்­கு­ளம்), கதிர், பொன் ராஜ் (கீழச்­சின்­ன­ணம்­பட்டி), சிறந்த ஆட்­ட­நா­ய­கன் பரிசை டி.செல்­வம் (தமிழ்­நாடு காவல்­துறை, தண்­டலை) ஆகி­யோர் வழங்­கி­னார்­கள்.

விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு பனி­யன் அன்­ப­ளிப்­பாக நட்­சத்­திர நண்­பர்­கள் அறக்­கட்­டளை நிறு­வ­னர் டி.குரு­சாமி மற்­றும் நாகா (கல்­லணை) ஆகி­யோர் வழங்­கி­னார்­கள்.
விளை­யாட்டு போட்­டி­க­ளில் கலந்து கொண்ட வீரர்­க­ளுக்கு மதிய உணவு நட்­சத்­திர நண்­பர்­கள் அறக்­கட்­டளை சார்­பாக வழங்­கப்­பட்­டது.

முடி­வில் சி.ராமச்­சந்­தி­ரன் உ­டற்­கல்வி ஆசி­ரி­யர் நன்றி உரை ஆற்­றி­னார். சிறப்பு அழைப்பாளராக ரெட்கிராஸ் செயலாளர் ராஜ்குமார், சமூக சேவகர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியை சிறப்பாக விழா கமிட்டியாளர்கள் செய்து இருந்தனர்.

நமது நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.