June 8, 2025
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுத்துள்ள மண்டல வானிலை.

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுத்துள்ள மண்டல வானிலை.

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுத்துள்ள மண்டல வானிலை ஆய்வு மையம், சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

இன்று நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அதேசமயம் மயிலாடுதுறை, சிவகங்கை, கடலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக ஆர்எம்சி தெரிவித்துள்ளது மேலும் விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

புதன்கிழமை கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.