March 2, 2026
மதுரையில் தமிழ்நாடு கிராம வங்கி கிளை திறப்பு விழா:

மதுரையில் தமிழ்நாடு கிராம வங்கி கிளை திறப்பு விழா:

மதுரை. நவம்பர் : 28.

மதுரை மாவட்டம், சிம்மக்கல் அருகே, தமிழ்நாடு கிராம வங்கியின் 682 வது கிளையை மதுரை சரக சிறைத் துறை துணைத் தலைவர் முருகேசன் மற்றும் மதுரை மாவட்ட ஊராட்சித் துறை உதவி இயக்குநர் அரவிந்த் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில், வங்கியின் தலைவர் மணி சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.
வங்கியின் மதுரை மண்டல மேலாளர் ஹிந்துஜா, வங்கியின் சிறப்பு திட்டங்களையும், பொதுமக்கள் பெறும் பயன்களையும் தெரிவிக்க, இணை மண்டல மேலாளர் தமிழ்வாணன், வங்கியின் பிற சேவைகளை விளக்கி பேசினார்.

வங்கியின் கிளை மேலாளர் கிருஷ்ணகுமார் அனைவரையும் வரவேற்றார். இதனைத்
தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களை வங்கியின் சார்பாக கௌரவப்படுத்தினர்.
இதில், தமிழ்நாடு கிராம வங்கியின் நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

1 thought on “மதுரையில் தமிழ்நாடு கிராம வங்கி கிளை திறப்பு விழா:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *