
அறநிலையத் துறை ஆய்வாளர் கட்டிடம் திறப்பு...
உசிலம்பட்டி:
12 லட்சம் மதிப்பீட்டில் இந்து சமய அறநிலைத்துறை சாரக ஆய்வாளர் அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பூதத்து அய்யனார் கோவில் வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்ட 12 லட்சம் மதிப்பீட்டில் இந்து சமய அறநிலைத்துறை சாரக ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிலையில், தேனி இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையாளர் ஜெயதேவி, உசிலம்பட்டி ஆய்வாளர் கிருபா தேவி மற்றும் அலுவலர்கள் இணைந்து குத்து விளக்கு ஏற்றி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
இதில், அறங்காவலர் குழு ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






