
தமிழக முதல்வர் வாழ்க !
தமிழகத்தை தலை குனிய விட மாட்டேன் என்று தமிழக முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகைகளை கோடி கணக்கில் வாரி வழங்கி வருகின்றார்கள்.
முதல்வர் கோப்பை போட்டியில் சேர்த்துக் கொள்கின்ற, ஒவ்வொரு விளையாட்டுக்கும், ஒரு கோடி ரூபாய் வீதம் 37 விளையாட்டுக்கு 37 கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கி வருகின்றார்கள்.
தமிழனின் வீரக்கலை கலை கராத்தே விளையாட்டை தமிழக முதல்வர் அவர்கள் ,தயவு கூர்ந்து முதல்வர் கோப்பை போட்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தில் சுமார் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் அனைவரையும் காப்பாற்ற வேண்டுமாய் கேட்டுக் கொண்டு, தமிழகத்தை தலை குனிய விடாமல், தங்களுக்கு என்றென்றும் உறுதுணையாக,பக்கபலமாக இருப்போம் என்று இரு கரம் கூப்பி வணங்கி தெரிவித்துக் கொள்கிறேன்.
கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பாதுகாப்பு நலசங்கத்தின் தலைவர்.தனசேகரன்






