
பௌர்ணமி சிறப்பு பூஜை
வாடிப்பட்டி, செப்.9-
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ரயில் நிலையம் அருகில் சொக்கையா சாமி ஜீவசமாதியில் ஆவணி மாத பௌர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.
இந்த பூஜையையொட்டி மதியம் 12 மணிக்கு விநாயகர் முருகன் சொக்கையா சுவாமி ஆகியோருக்கு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகளுடன் சிறப்பு அலங்காரமும் பூஜையும் செய்யப்பட்டது. இதில் பஜனை பாடல்கள் பாடி கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதான கூடத்தில் அன்னதான வழங்கப்பட்டது.
இது ஏற்பாடுகளை சொக்கையா சுவாமி மடத்தின் நிர்வாக தலைவர் கே. மணிகண்டன் செய்திருந்தனர்.






