
வ உ சி பிறந்தநாள் விழா
வாடிப்பட்டி, செப்.6-
சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளை 154 வது பிறந்தநாளை முன்னிட்டு,
தமிழ்நாடு வ.உ.சி. இளைஞர் பேரவை சார்பாக, மதுரை சிம்மக்கலில் உள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளை சிலைக்கு மாநிலத் தலைவர் மின்னல் பிள்ளை தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் ரமேஷ்குமார், மாநிலப் பொருளாளர் சரவணச் செல்வம் பிள்ளை, தலைமை நிலைய துணைச் செயலாளர்கள் சரவணன் பிள்ளை, வெற்றிவேலன் பிள்ளை, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் பிள்ளை, மதுரை வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் முத்துலெட்சுமி, மதுரை மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்தலா பிள்ளை மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.






