
நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றிய வார்டு உறுப்பினர்
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி ஊராட்சியில் உள்ள பகுதி காயத்ரி நகர். இப்பகுதியில் நீண்ட நாட்களாக தெரு விளக்கு வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுவதை கண்ட அப்பகுதியின் உடைய வார்டு உறுப்பினர் சாக்கீர்கான் அவர்கள் ஊராட்சி மன்றத்தில் கோரிக்கைகள் வைத்து அதன் விளைவாக இன்று அப்பகுதியில் மூன்று தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு அப்பகுதி வெளிச்சமடைந்துள்ளது.
நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றிய உறுப்பினர் சாக்கீர்கான் அவர்களை அப்பகுதியின் உடைய பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்






