March 2, 2026
கமுதியில் ஆன்மீக சொற்பொழிவு – தேசபக்தர்களின் பங்கேற்பில் சிறப்பாக நடைபெற்றது

கமுதியில் ஆன்மீக சொற்பொழிவு – தேசபக்தர்களின் பங்கேற்பில் சிறப்பாக நடைபெற்றது

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், தெய்வீகத் திருமகனார் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் ஆன்மீகச் சிந்தனை மன்றத்தின் சார்பில் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பசும்பொன் தேசியக் கழகத்தின் தலைவர் என். ஜோதி முத்துராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.

தேவர் மகாலில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆன்மீகப் போதனைகள் மற்றும் தேசபக்த சிந்தனைகள் பற்றி விரிவாக பேசப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பேராசிரியர் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் அவர்கள், பசும்பொன் தேவரின் ஆன்மீகக் கொள்கைகள், தியாகப் பணிகள் மற்றும் இன்றைய சமூகத்திற்கு அவற்றின் தேவையை மனமுவந்து எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் கமுதி-பசும்பொன் திரு உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவுக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் இராமநாதபுரம் பா.ஜ.க மாவட்டத் தலைவர் முரளிதரன், மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சண்முகநாதன், மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

தேசபக்தர்கள், பக்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி, பசும்பொன் தேவரின் ஆன்மீகமும் தேசபக்தியும் நிறைந்த சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முக்கிய மேடையாக அமைந்தது. நிகழ்ச்சி நிறைவில், பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *