March 2, 2026
திருமண விழாவில் ஏற்பட்ட சண்டை விவகாரதில் பால் கண்ணனுக்கு 11 ஆண்டுகள் சிறை

திருமண விழாவில் ஏற்பட்ட சண்டை விவகாரதில் பால் கண்ணனுக்கு 11 ஆண்டுகள் சிறை

சிவகிரி: 2017ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி, சிவகிரி பகுதியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் ஏற்பட்ட முறுகலில் பால் கண்ணன் என்ற ரவுடி தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு எண்: குற்ற எண் 245/2017 பிரிவுகள்: இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 294(b), 324, 307
அழைக்கப்பட்ட நீதிமன்றம்: சங்கரன்கோவில் சார்பு நீதிமன்றம் தீர்ப்பு எண்: S.C. 371/2018

சம்பவத்தின் போது, திருமண வீட்டில் தகவல் தகராறு ஏற்பட்ட நிலையில், பால் கண்ணன் என்பவர், சுரேஷ் மற்றும் கண்ணன் ஆகியோரிடம் கடுமையான தாக்குதலை மேற்கொண்டதாக வழக்கில் பதிவாகியுள்ளது. இதில் ஒருவர் பெட்டி கொடுகாயம் அடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, சங்கரன்கோவில் சார்பு நீதிமன்ற நீதிபதி திரு மகேந்திரவர்மா அவர்கள் வழக்கை விசாரித்ததில், குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பால் கண்ணன் என்பவருக்கு கீழ்கண்டவாறு தண்டனை விதிக்கப்பட்டது:

த.இ.ச 307 பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் கடும் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதம்

த.இ.ச 324 பிரிவின் கீழ் 1 ஆண்டு சிறை தண்டனை

அரசுத் தரப்பு வழக்கறிஞராக கண்ணன் பதவியுடன் சிறப்பாக வகித்து வழக்கை வெற்றிகரமாக நடத்தினார். மேலும், வழக்கின் முக்கியமான ஆதாரங்களை நேர்மையாக தரவமைத்த சிவகிரி காவல் நிலைய காவலர்கள் மற்றும் கோர்ட் காவலர் Gr.l 1474 பாண்டி ஆகியோரது நடவடிக்கையை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு அரவிந்த் அவர்கள் பாராட்டி, “நேர்மையும் தைரியமும் கூடும்போது நீதியும் நிகழும்.என புகழ்ந்தார்.

இந்த தீர்ப்பு, குற்றவாளிகளுக்கு கடுமையான அறிவுறுத்தலாகவும், சமூகத்தில் சட்டம் மீதான நம்பிக்கையை உறுதி செய்யும் விழிப்புணர்வாகவும் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *