June 30, 2025
வத்தலகுண்டு பேருந்து நிலையம் துர்நாற்றம் வீசும் அவல நிலை நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வருமா?

வத்தலகுண்டு பேருந்து நிலையம் துர்நாற்றம் வீசும் அவல நிலை நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வருமா?

எப்போது தீரும் இந்த அவலம் பொதுமக்கள் முதல்வருக்கு கோரிக்கை.

நிலக்கோட்டை ஜூன் 18
தமிழகத்தில் மிகவும் பிரபலமான பேரூராட்சியில் ஒன்றாக திகழ்கிறது வத்தலகுண்டு. இந்த பேரூராட்சி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ளது. வத்தலகுண்டுக்கு தினந்தோறும் கொடைக்கானல், பெரியகுளம், தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, ஈரோடு, கோயம்புத்தூர், சென்னை இப்படி ஏராளமான அனைத்து நகரங்களுக்கும் செல்லக்கூடிய நன்கு போக்குவரத்து துறையில் வளர்ச்சி அடைந்து பேரூராட்சி தான் வத்தலக்குண்டு.

இங்கு சுமார் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து போகும் இடமாக திகழ்கிறது. இந்த பஸ் நிலையம் கொடைக்கானல் , பள்ளங்கி மற்றும் மலைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லாத நேரங்களில் இரவு நேரங்களில் இங்கு தான் தங்கி காலையில் பஸ்சை பிடித்து தங்கள் கிராமங்களுக்கு செல்வது வழக்கமாகவே கொண்டுள்ளார்கள். அப்படிப்பட்ட பஸ் நிலையம் பஸ் நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதியான சிறுநீர் மற்றும் கழிப்பறை முறையாக பராமரிக்கப்படாமல் மரங்களால் கட்டி வைத்தும், பல நேரங்களில் செயல்படாமலே பூட்டி கிடக்கிறது.

இதன் காரணமாக இங்கு இலவசமாக செயல்படக்கூடிய கழிப்பறை என்பது நிரந்தரமாக மூடி கிடக்கிறது என்று சில பொதுமக்கள் குற்றம் சாட்சி வருகின்றனர். இந்த பஸ் நிலையத்தில் நூற்றுக்கணக்கான வணிக வளாக கட்டிடங்களை பேரூராட்சி நிர்வாகம் நிர்வாகித்து வந்தாலும் அங்கு பல்வேறு வகையில் வரியில் வசூல் செய்யப்பட்டு பேரூராட்சிக்கு வருமானம் கிடைக்கிறது என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. வருமானம் இருந்தும் ஏதோ ஒரு காரணத்திற்காக கடந்த சில ஆண்டுகளாக இலவச கழிப்பறை பயன்பாட்டுக்கு வருவதே இல்லை. இதனால் அங்கு பத்து ரூபாய் கொடுத்து சிறுநீர் கழிக்கும் அளவுக்கு பொதுமக்களிடம் பண வசதி இல்லை என்றாலும் வேறு வழியில்லாமல் பத்து ரூபாய் கொடுத்து சிறுநீர் கழிக்கவும் மலம் கழிக்கவும் சென்றால் அதுவும் முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. ஆகையால் வத்தலகுண்டு பஸ் நிலையத்திற்குள் நுழைவது என்பது தொற்றுநோய் பரவி விடுமோ என்ற அச்சத்தில்தான் தினம் தோறும் இப்பகுதியில் பஸ்ஸில் ஏற வரும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலதரப்பட்ட மக்கள் புகார் கொடுத்தும் கண்டு கொள்வதில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு இப்பகுதியில் உள்ள பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விருவீடு பகுதியைச் சேர்ந்த பாண்டியன் கூறியதாவது:-

வத்தலக்குண்டு பேரூராட்சி நிர்வாகம் பஸ் நிலையத்தில் இருக்கும் கழிப்பறைகள் மற்றும் சுகாதார வளாகங்களை எந்த வகையிலும் பராமரிக்கப்படாமல் பஸ் நிலை பகுதியில் இருந்து வரும் வருமானத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படுத்தி வருகின்றனர். இன்றைக்கு கொரோனா போன்ற கொடிய நோய்கள் பரவும் நிலையில் கூட பஸ் நிலையத்திற்குள் நுழைந்தால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் வருமான வரக்கூடிய வேலைகளை மட்டுமே பேரூராட்சி நிர்வாகம் கராராக செய்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தமிழக முதல்வரும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தேன்மொழி சேகர் கூறியதாவது:- வத்தலகுண்டு பஸ் நிலையம் என்பது ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே மிகவும் பிரபலம் ஒரு பஸ் நிலையம் ஆகும். இந்த பஸ் நிலையம் தற்போது சுகாதாரமற்ற பயணிகள் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசும் நிலையில் இருப்பதாக பொதுமக்கள் பல நேரம் என்னிடம் புகார் கொடுத்தனர். இது சம்பந்தமாக பேரூராட்சி நிர்வாகத்திடம் பேசியும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது அரசு அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுகிறார்கள். எனவே தொற்றுநோய் பரவி மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு பஸ் நிலையத்தை உடனே நவீனப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.