June 8, 2025
பழனியில் பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள் கைது.

பழனியில் பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள் கைது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் டிஎஸ்பி தனஞ்ஜெயன் அவர்களின் உத்தரவுபடி பழனியில் ரவுடிசத்தை ஒழிக்கும் விதமாக தினந்தோறும் ஆங்காங்கே பழனி நக ரகாவல் துறையினர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளர் விஜய் அவர்களும் காவல்துறையினரும் தினமும் தீவர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இரண்டு இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பட்டாக்கத்தியுடன் இடையூறு செய்த வகையிலும் ஆபாசமாக பேசியும் அவர்களை தொந்தரவு செய்து வந்தனர்.

பழனி நகர காவல் துறையினர் விரைந்து சென்று பழனி RMK பில்டிங், RF ரோட்டைச்சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் தமிழ்செல்வன் (19,) பழனி சத்தியா நகரைச் சேர்ந்த வேல்முருகன் மகன் ராமர் (20), ஆயுதத்துடன் சுற்றித்திரிந்த இளைஞர்களை பழனி நகர காவல் துறையினர் பிடடித்து வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்தனர்.

பழனியை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் தினந்தோறும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகையால் லாட்டரி விற்பவர்களும் கஞ்சா விற்பவர்களும் ரவுடிசம் செய்பவர்களையும் பழனி நகர காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பழனி காவல்துறையினர் பாராட்டிய வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.