June 8, 2025
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சிகளுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சிகளுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி.

திருவாரூர் ஜூன் 6.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்ற தொகுதி உள்ளிக்கோட்டை, மகாதேவப்பட்டினம் ஊராட்சி, நீடாமங்கலம் ஒன்றியம், காரக்கோட்டை , பேரையூர், ஆகிய ஊராட்சியில் 109 பயனாளிகளின் வீட்டிற்கு நேரடியாக நடந்து சென்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா பட்டா வழங்கினார். அப்போது திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் உடன் இருந்தார்.

மன்னார்குடி வட்டம், உள்ளிக்கோட்டை பகுதியினை சேர்ந்த 51 பயனாளிகளுக்கும், மகாதேவப்பட்டினம் பகுதியினை சேர்ந்த 17 பயனாளிகளுக்கும்,
நீடாமங்கலம் ஒன்றியம், காரக்கோட்டை ஊராட்சியில் 35 பயனாளிகளுக்கும், பேரையூர் ஊராட்சியில் 6 பயனாளிகளுக்கும் என மொத்தம் 109 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மன்னார்குடி வட்டம், பரவாக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் மோகனச்சந்திரன் தலைமை வகித்தார். 2024-2025ஆம் ஆண்டு, 15வது மத்திய நிதிக்குழு மான்யம் நிதியில் ரூ.148.60 லட்சத்தில் புதிய ஆரம்ப சுகாதார மையம் கட்டடம் கட்டுவதற்கு மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா அடிக்கல் நாட்டினார்.
அப்போது அமைச்சர் தெரிவித்ததாவது…

டாக்டர்.கலைஞரின் வழியில் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் கடைக்கோடி மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், ரூ.148.60 இலட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் அமையவுள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மக்களுக்கு மிகபெரும் வசதியாக அமையும். ஆரம்ப சுகாதார நிலையம் அமைய உறுதுணையாகயிருந்த அனைவருக்கும் நன்றி, மிகவிரைவில் மிக பிரம்மண்டமாக ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படும் என தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.


பரவாக்கோட்டை ஊராட்சி பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு சீருடை மற்றும் கல்வி உபகரணங்களையும் அமைச்சர்முனைவர்.டி.ஆர்.பி.ராஜா வழங்கினார். இந்நிகழ்வில், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் யோகேஸ்வரன், மன்னார்குடி வட்டாட்சியர் கார்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.