
அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியில் இன்று மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை P இவாஞ்சலின் தலைமை தாங்கினார். பள்ளியின் பொருளாதார ஆசிரியர் G பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார்.
பள்ளியின் முன்னாள் மாணவரும் நெல்லை மக்கள் நல நண்பர்கள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான நெல்லை டேவிட் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மரக்கன்றுகள் நட்டார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய பசுமை படையின் ஒருங்கிணைப்பாளரும் பள்ளியின் உடற்கல்வி இயக்குனருமான வீ. வீரபாண்டியன் சிறப்பாக செய்திருந்தார். இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.