
அருகே பாலசமுத்திரம் பேரூராட்சியில் காவல் நிலையம் அமைக்க பூமி பூஜை.
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பாலசமுத்திரம் பேரூராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இன்று பாலசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, காவல் நிலையம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் இன்று பூமி பூஜையுடன் இனிதே நடைபெற்றது…..
இந்நிகழ்வில் பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனஜெயன், மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், மற்றும் காவல்துறை அதிகாரிகள், பாலசமுத்திரம் பேரூராட்சி தலைவர் இராஜராஜேஸ்வரி சுப்புராமன், செயல் அலுவலர் மு.சித்திரைக்கனி, ஒன்றிய கழக செயலாளர் இரா. சௌந்தரபாண்டியன், பேரூர் கழக செயலாளர் சோ.காளிமுத்து, மருத்துவ அலுவலர் சுரேஷ் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.