June 8, 2025
நீட் அல்லாத படிப்புகளுக்கு 10% இட ஒதுக்கீட்டு அரசாணையை விரைந்து வழங்கிட வேண்டும்!

நீட் அல்லாத படிப்புகளுக்கு 10% இட ஒதுக்கீட்டு அரசாணையை விரைந்து வழங்கிட வேண்டும்!

புதுச்சேரி ஜூன்- 02

நீட் அல்லாத படிப்புகளுக்கு 10% இட ஒதுக்கீட்டு அரசாணையை விரைந்து வழங்குவதோடு- அந்த இட ஒதுக்கீட்டில் சேருகின்ற மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பினை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். புதுச்சேரி மாநில முதல்வருக்கு திமுக துணை அமைப்பாளர் அணிபால் கென்னடி எம்எல்ஏ வலியுறுத்தல்.

மேலும் அவர் கூறியதாவது புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக பிஎஸ்சி நர்சிங்- பிஎஸ்சி விவசாயம்- BPT -MLT- கால்நடை மருத்துவம்- பொறியியல் பட்டப்படிப்பு -உள்ளிட்ட தொழில் முறை படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதையொட்டி, கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மார்ச் 24ஆம் தேதி பூஜ்ய மணி நேரத்தில் நீட் அல்லாத படிப்புகளுக்கு 10% இட ஒதுக்கீடு வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்த்தேன். அதன் அடிப்படையில் முதலமைச்சர் அவர்களும் அது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்தார்.

இந்த நிலையில் 2024- 2025 கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டு +2மாணவர்கள் முதன்முறையாக சிபிஎஸ்இ பொதுத் தேர்வு எழுதியதில் அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண்கள் கடும் சரிவை கண்டுள்ளதாக தெரிகிறது. மேலும் பொதுத் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் பெறும் மதிப்பெண் சதவிகிதம் தனியார் பள்ளி மாணவர்களை ஒப்பிடும்போது குறைவாகவே இருக்கக்கின்றது.

இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகள் எட்டாக்கனியாகும் நிலை ஏற்படும்.. எனவே அரசு பள்ளி மாணவர்களின் நலனைக்கருத்தில் கொண்டு மருத்துவக் கல்வியை போல் வரும் 2025 26 ஆம் கல்வி ஆண்டு முதல் தொழில்முறை படிப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று கடந்த மாதம் முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார் .

அதேபோல 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என்ற நிபந்தனையால் கடந்த ஆண்டு மருத்துவ படிப்பு கலந்தாய்வில் பத்து சதவீத இட ஒதுக்கீட்டில் 37 எம்பிபிஎஸ் இடங்களில் 20க்கும் குறைவான மாணவர்கள்தான் சேர்ந்தனர் . ஆகவே மேற்கண்ட நிபந்தனையை தளர்த்தி மேலும் ஒரு சலுகை அளிக்கும் வகையில் தமிழ்நாட்டைப் போல ஆறு முதல் 12 வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்ற முறையினை கொண்டு வர வேண்டும் .முதல் முறையில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருந்தால் இரண்டாவது நிபந்தனையில் மாணவர்களை சேர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றேன் . அப்பொழுதுதான் இடைநிற்றலை நாம் தடுக்க முடியும்.

மேலும் முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பு செய்ததோடு இன்னும் அரசாணை பிறப்பிக்கவில்லை என்று அறிகின்றேன். அது மட்டுமல்லாமல் ஏறக்குறைய இந்த 10% இட ஒதுக்கீட்டில் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தெந்த பிரிவில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று விவரத்தையும் இதுவரை வெளியிடவில்லை. மேலும் அரசு பள்ளி மாணவர்கள் மிக மிக பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மாணவர்கள் என்பதால் அதில் சேர்கின்ற அனைத்து மாணவர்களின் கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்கும் என்ற அறிவிப்பினையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விரைந்து அறிவிக்க வேண்டுமென திமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறே.ன் இவ்வாறு அனிபால் கென்னடி எம்எல்ஏ கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.