
பெரியகுளத்தில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்: திருச்சி சிவா எம்.பி. சிறப்புரை
தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் நகர திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் “நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் பல்லாண்டு” சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு நகர செயலாளர் முகமது இலியாஸ் தலைமை வகித்தார். அவைத்தலைவர் வெங்கடாசலம் வரவேற்புரையாற்றினார். நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார், நகர் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் தங்க.தமிழ்செல்வன் எம்பி, சரவணகுமார் எம்எல்ஏ, கழக துணைப்பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டு திமுக அரசு நான்காண்டு செய்த திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றினர்.
இதில் தொகுதி பொறுப்பாளர் முத்துராமலிங்கம், மாவட்ட அவைத்தலைவர் செல்லப்பாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திக், வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் ராஜ்குமார், நகர் நிர்வாகிகள் சரவணன், சுந்தரபாண்டியன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.