June 8, 2025
கமுதியில் "ஆபரேசன் சிந்தூர்" வெற்றியை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பேரணி நடைபெற்றது.

கமுதியில் "ஆபரேசன் சிந்தூர்" வெற்றியை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பேரணி நடைபெற்றது.

கமுதி மே:28 

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆபரேசன் சிந்தூர்  வெற்றியை கொண்டாடும் வகையில் பேரணி நடைபெற்றது. 

கமுதியில் ஆபரேசன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் பாஜக மாநில இளைஞரணி செயலாளர்   டாக்டர்  இராம்குமார் பாண்டியன்  தலைமை வகித்தார் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள்  கருமலையான்,  இராஜேந்திரன்,பாஜக மாவட்டத் துணைத்தலைவர் கணபதி,மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கே.தேவர்,  அவைத்தலைவர் டி.சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்து இந்திய இராணுவ வீரர்கள் ஆபரேசன் சிந்தூர் போரில் பாக்கிஸ்தான் நாட்டை விழ்த்தி வெற்றியை கொண்டாடும் வகையில்  மாபெரும் பேரணி நடைபெற்றது.

கமுதி மும்முனை எட்டுக்கண் பாலத்தில் தொடங்கி பேருந்து நிலையம் வழியாக ஜெய்ஹிந்த் பாரத் மாதகி ஜெய் என்ற கோசங்கள் முழங்க  ஊர்வலமாக சென்று சுதந்திர போராட்ட வீரர்கள் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர், மருது பாண்டியர், காமராசர்  ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் ஓபிஎஸ் அணி ஒன்றியச் செயலாளர்கள் கருப்பு சட்டை முருகேசன், வாசுதேவன், அமமுக கமுதி நகரச் செயலாளர் மோகனபாலன், ஃ பெடரல் பிளாக் மாநிலத் தலைவர் லெட்சுமணன், பார்வர்ட் பிளாக் கட்சியின் மாணவர் அணி மத்தியக் குழு உறுப்பினர் மு.வெள்ளைப்பாண்டியன், பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள் பூபதிராஜா, அழகுமலை, மாவட்ட விவசாயி அணித் தலைவர் இயற்கை விவசாயி இராமர், பசும்பொன் இராமமூர்த்தி, சுந்தராஜன், வாரகி உத்திரச்செல்வன், வழக்கறிஞர் அய்யாத்துரைசேதுபதி, மகளிர் அணி நிர்வாகிகள் வெள்ளையம்மாள், பரமேஸ்வரி, ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் இளைஞர்கள் நூற்றுக்கணக்கான நபர்கள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாஜக கட்சியின் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்வழக்கறிஞர் வேலவன் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.