June 8, 2025
பெரியகுளம் கைலாசநாதர் மலைக்கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு

பெரியகுளம் கைலாசநாதர் மலைக்கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு

தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி மலைமேல் அருள்மிகு ஶ்ரீ பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு கைலாசநாதருக்கும், நந்திகேஸ்வரர்க்கும் பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கைலாசநாதர் சுவாமி பக்தர்களால் பூப்பல்லாக்கில் கோவில் வளாகத்தை சுற்றி உலா வந்தது. அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் தீபாரதனைகள் நடந்தது. இதில் பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும் ராஜகுரு, சரவணன், ரத்தினம் குடும்பத்தார் சார்பில் அன்னபிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.