June 8, 2025
விடுதலை..

விடுதலை..

அப் படி போனால்.. இப் படி யென்பார்.. இப் படி போனால் அப் படி என்பார்..
அப்படி யானால் எப்படி நண்பா? நம் படி எப்படி நற்படி ஈன்பாய்?.
வரும்படிக்காக வசதியாய் சொல்வார் வசதி வாய்ப்புகள் அமையுமா சொல்வாய்?
தனக்கென வேண்டி அப்படிச் சொல்வார் தக்கன தேடலை விடவா செய்வாய்?
அடுப்படி நெருப்பாய் எரியவே செய்வாய் அனைத்து செயலையும் உவந்தே செய்வாய்!.
சாதிகள் சாடி நிமிர்க என்பார் சந்தடியின்றி அவரதில் குளிப்பார்
வேற்றுமை சொல்லி வீரமாய் நிற்பார் விடுதலையின்றி பதவியில் களிப்பார்..
அவரை சொல்லியா அறியாமையில் நடப்பாய்.. ஆட்சியை இழந்தா தனிமையில் நிற்பாய்?
தப்படித் தாளங்கள் செய்வார் முன்னே தவறுகள் அடிபட உரைப்பாய் நின்னே..
செப்படி வித்தைகள் செய்வார் போக சிந்தையில் அடிப்பாய் மறதியை விடுப்பாய்!
படிப்பாய் பாடங்கள் எங்கும் விரிப்பாய் பசப்புகள் போக தமிழ் நிலம் மணப்பாய்!
இப்படி இருந்தால் இருக்கட்டும் என்றால்.. இருக்குமா நாளை நமக்கென நிலமாய்?
உழுவன உழுது உவப்பன செய்து.. வருவன வளர்த்து வாழ்வென நிமிர்த்து!
பயிலென பயின்று பல்கலை படித்து தனதென இருக்க தக்கன உடுத்து!
உயர்வென உயர்த்தி உருப்படியாக உன்பணி செழித்து தமிழைன ஆள!.
படிப்படியாக படிப்பினையாக கொடுமைகள் சாக கோட்டங்கள் ஓங்க..
வடி வடிச் சொல்லை வளர்தமிழ் ஓங்க வணங்கிட பலரும் நம் பின்னாக!
உரு உருவெனவே ஊர்உலகளா உயர்வினை ஆக்கு நம் குலம் தாங்க!

பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழர் தன்னுரிமைக் கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.