June 8, 2025
தென்காசி மாவட்டத்தின் உலக செவிலியர் தின விழா அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தின் உலக செவிலியர் தின விழா அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தின் உலக செவிலியர் தின விழா இன்று (புதன்கிழமை) தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழா மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) உறைவிட மருத்துவர் டாக்டர் செல்வபாலா தலைமையிலும், தலைமை மருத்துவர் டாக்டர் ஜெஸ்லின் முன்னிலையிலும் நடைபெற்றது. VTSR குழும நிறுவனர் இம்ரான் கான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து விழாவை சிறப்பித்தார்.

நிகழ்ச்சியை செவிலியர் உமா மஹேஸ்வரி மற்றும் செவிலியர் மல்லிகா தொகுத்து வழங்கினர். வரவேற்புரையை செவிலியர் உமா மஹேஸ்வரி வழங்கினார். செவிலியர் கண்காணிப்பாளர் திருமதி ஜெகதா அவர்கள் வாழ்த்துமடல் வாசித்தார்.

மேலும், செவிலியர் கண்காணிப்பாளர்கள் திருமதி பத்மாவதி, ராசாத்தி ஜெகதா, வசந்தி மற்றும் முத்துலட்சுமி ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

தலைமை மருத்துவர் டாக்டர் ஜெஸ்லின், “மருத்துவமனையின் முதுகெலும்பாக செவிலியர்கள் திகழ்கிறார்கள். தியாகமும் அர்ப்பணிப்பும் நிறைந்த சேவையை வழங்கும் அனைத்து செவிலியர்களுக்கும் வாழ்த்துகள்” என பாராட்டினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும், தலைமைக் செவிலியர் பத்மாவதி மற்றும் VTSR குழும நிறுவனர் இம்ரான் கான் ஆகியோருக்கு டாக்டர் ஜெஸ்லின் பொன்னாடை போர்த்தி கௌரவம் செய்தார்.

VTSR குழும நிறுவனர் இம்ரான் கான், விழாவுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, பரிசுகள் வழங்கியும் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியின் இறுதியில், செவிலியர்கள் வழங்கிய ஆட்டம், பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இதில் பங்கேற்ற அனைவருக்கும் டாக்டர் ஜெஸ்லின் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

இவ்விழாவின் நிறைவில், நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் செவிலியர் கண்காணிப்பாளர் திருமதி ஜெகதா நன்றி தெரிவித்தார்.

விழா ஏற்பாடுகளை செவிலியர்கள் சண்முகப்பிரியா, சீதாலட்சுமி மற்றும் ஆயிஷா பானு சிறப்பாக மேற்கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.