
கீழக்கரை நகரில் வெறி நோய் தடுப்பூசி முகாம்! நகராட்சி ஆணையாளர் தகவல்!!
ழக்கரை நகர் பகுதியில் சுற்றித்திரியும் சமூக நாய்களுக்கு ரேபிஸ் நோய் வராமல் தடுக்கும் பொருட்டு வெறி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி இன்றிலிருந்து மே 19ந்தேதி திங்கள் கிழமை முதல் நடைபெறும் என நகராட்சி ஆணை யாளர் ரங்கநாயகி தெரிவித்துள்ளார்.
இம்முகாமை நகர் மன்ற தலைவர் ஜகநாஸ் ஆபிதா, துணை தலைவர் ஹமீது சுல்தான் மற்றும் மண்டல இணை இயக்குனர் கால்நடை பராமரிப்பு துறை டாக்டர். ரவிச்சந்திரன் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
டாக்டர். லீலாவதி கால்நடை மருத்துவர் அவர்கள் தடுப்பூசி செலுத்தினர் உடன் சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா மற்றும் நகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்பு துறை பணியாளர்கள் இருந்தனர்…