
விடுதலை..
அன்பைச் சூடு அறிவோடு
அடுத்தவர் நலத்தில் பற்றோடு
தனக்கென வைக்கும் வைப்போடு
தக்கன செய்வாய் நெறியோடு!
பூக்கள் பூக்கும் மரமாக..
புன்னகை உதிர்க்கும் முகமாக..
கனவுகள் செழிக்கும் வயலாக..
கற்பனை விடுத்து செயலாக!..
ஆயிரம் பிளவுகள் வழியெங்கும்
அடுத்தது எதுவென தெரியாது..
பார்த்துப் போகணும் நம் வண்டி
பற்றுகள் சிறக்க நாள் போக!
அறியார் பாத்து மோதல் விடு
அஞ்சுதல் என்னும் நினைப்பை விடு
கெடுப்பார் பார்த்து விலகி நடு
கீழென யாரையும் நினைத்தல் விடு!
ஆசைக்கு யாரும் அலைவோரே..
அடுத்ததை நாடி விழைவோரே..
கையில் இருக்க புசிப்போரே..
கவணம் இருக்கட்டும் வழியோரே!.
வைத்து வைத்து யார் தின்பார்?
வைத்ததை யெல்லாம் தனக்கென்பார்
உடுத்ததை உடுத்தி பழக்கம் என்பார்..
உதவுதல் போலே எது நண்பா?.
(சிறுவர்களுக்கு)
பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழர் தன்னுரிமைக் கட்சி.