
விவசாயிகளுக்கு , மஞ்சள் ஓட்டும் பொறி குறித்து மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவர் செயல் விளக்கம்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், பிள்ளையார்நத்தம் கிராமம். மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் , இறுதியாண்டு பயிலும் மாணவர் சே.பாரதி, கிராமப்புற விவசாயப் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக , ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் ஓட்டும் பொறி குறித்த செயல் விளக்கத்தினை பிள்ளையார்நத்தம் கிராமத்தில் நடத்தினார்.
மேலும் வெள்ளை ஈக்களால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்தும் விவசாயிகளிடம் எடுத்துரைத்தார் .. விவசாயிகளுக்கு இது குறித்த துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது .விவசாயிகள் தங்களது சந்தேகங்களை மாணவரிடம் கேட்டு அறிந்து கொண்டனர்